சிந்திக்க
ஒரு தந்தை தன் சிறிய மகளோடு ஒரு பாலத்தை கடந்து கொண்டு இருந்தார். தன் மகளின் பாதுகாப்பிற்க்காக அவளிடம் 'என் கையை பிடித்துக்கொள், அப்போதுதான் பத்திரமாக பாலத்தை கடப்பாய்' என்றார்.
அதற்க்கு மகளோ, 'அப்பா நீங்கள் என் கையை பிடித்துக்கொள்ளுங்கள்' என்றாள். அதற்க்கோ தந்தை, நான் உன் கையை பிடிப்பதற்க்கும், நீ என் கையை பிடிப்பதற்க்கும் என்ன வித்தியாசம் என்றார்.
அதற்க்கு அந்த சிறுமி, 'ஆமாம் அப்பா, மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. நான் உங்கள் கையை பிடித்திருக்கும் போது ஏதேனும் நடந்தால் நான் உங்கள் கையை விட்டுவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் நீங்கள் என் கையை பிடித்திருக்கும் போது எது நடந்தாலும் என் கையை தப்பி தவறி கூட விட்டு விட மாட்டீர்கள், நான் பயம் இல்லாமல் வருவேன்' என்றாள்.
தந்தையின் கண்களில் கண்ணீர்.
இது உறவைக்காட்டிகிறது, உறவின் பிணைப்பைக்காட்டுகிறது.
நீங்கள் விரும்பியவர் உங்கள் கையை பிடிக்க காத்திருக்காதீர்கள்,
நீங்கள் விரும்பியவர் கையை உடனே நீங்கள் சென்று பிடியுங்கள்.
- மழைத்துளி

